புதுடெல்லி: லடாக் எல்லை பிரச்னையில் அமைதியான முறையில் தீர்வு காண சீனா ஒப்பு கொண்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிழக்கு லடாக்கின் பான்காங் சோ, கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக், தவுலத் பெக் ஓல்டி எல்லை பகுதிகளில் சீனப் படைகள் ஊடுருவியதைத் தொடர்ந்து, இந்திய ராணுவமும் அங்கு வீரர்களை குவித்தது. இதனால், அப்பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது. இப்பிரச்னையை சுமூகமாக பேசி தீர்த்து கொள்ள இரு நாடுகளும் முடிவு செய்தன.அதன்படி, நேற்று முன்தினம் லடாக்கில் சீனாவின் எல்லைக்குட்பட்ட மால்டோ பகுதியில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இந்தியா தரப்பில் லே 14வது பகுதி தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங்கும், சீன தரப்பில் திபெத்தின் ராணுவத் தளபதியும் பங்கேற்றனர்.இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: