சென்னை: சென்னையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகின்ற 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை தேர்வு மையங்களுக்கு போக்குவரத்து சேவை ஏற்பாடு செய்யப்படும் என்று சென்னை முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை விடுத்துள்ளார்.