திருப்போரூர்: இலவச மின்சாரம் ரத்து செய்ததை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். புதிய மின்சார கொள்கையின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநில விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் மத்திய அரசின் மின் கொள்கையை கண்டித்து அடையாள உண்ணாவிரதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம் சார்பில் திருப்போரூர் பகுதியில் மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமையில் 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வதற்காக பந்தல் அமைத்து நாற்காலிகளை போடும் பணியில் ஈடுபட்டனர்.