ஆலந்தூர்: மடிப்பாக்கம் சங்கர நாராயணன் தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (57). ராயப்பேட்டையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் சப்-ரிஜிஸ்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் மாலை பணிமுடிந்து இரு சக்கர வாகனத்தில் தனது வீடுநோக்கி சென்றுகொண்டிருந்தார். கிண்டி சிட்டி லிங்க் சாலை வழியாக சென்றபோது காற்றாடி விடும் மாஞ்சா நூல் அவரது கழுத்தை இறுக்கியது. இதனால் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். மேலும், மாஞ்சா நூல் அவரது கழுத்தை இறுக்கியதில் கழுத்து வீங்கி காயம் ஏற்பட்டது.