சென்னை : சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 967 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 15,770 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 8,136 பேர் குணமடைந்துள்ள நிலையில், 128 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 2,935 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.கோடம்பாக்கத்தில் 1,867 பேருக்கும், திரு.வி.க.நகரில் 1,651 பேருக்கும், தேனாம்பேட்டை -1867 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.