சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தற்போது 23 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 900 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது. இதன்படி பார்த்தால் தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறி விட்டதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது : கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை பயன்படுத்தி கொரோனா பரவலை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். அவ்வாறு கட்டுப்படுத்தி இருந்தால் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து இருக்கும். ஆனால் தமிழகத்தில் நாளுக்கு கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே இருக்கிறது.