அண்ணாநகர்: சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் சுற்றித் திரிந்த தெரு நாயை, மர்மநபர் தாக்கியதில் இரு கண்களும் வெளியே வந்த நிலையில் ஆபத்தான நிலையில் சுற்றித் திரிந்தது. இதை பார்த்த பொதுமக்கள், கோடம்பாக்கத்தை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் அஸ்வந்த் (23) என்பவருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர் சம்பவ இடத்துக்கு வந்து, படுகாயமடைந்த நாயை மீட்டு சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். அப்போது, மர்ம நபர் பலமாக தாக்கியதில், அந்த நாய்க்கு பார்வை பறிபோனது தெரியவந்தது.