திருப்போரூர்: ஜூன் மாதம் 1ம் தேதி முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாகவும், இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் நேற்று முன் தினம் முதலே வாட்சப் வதந்திகள் றெக்கை கட்டி பறக்கத் தொடங்கின. இதனால் நேற்று காலை முதலே குடிமகன்கள் சென்னைப் புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை முற்றுகையிடத் தொடங்கினர். இதனால் வழக்கத்தை விட பல கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.