மாடியிலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி

திருப்போரூர்:  சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கோவலன் (47). இவர் சென்னை தி.நகரில் உள்ள தனியார் இணையதள சேவை வழங்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். திருப்போரூரை அடுத்துள்ள அம்மாப்பேட்டை கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் சர்வர் இயங்குவதற்கான சிக்னல் டவர் பொருத்துவதற்காக கோவலனும் உடன் பணியாற்றும் ராஜ்குமார் என்பவரும் சென்றனர். அங்கிருந்த நிறுவனத்தின் மொட்டை மாடியில் சிக்னல் டவர் பொருத்தும் பணியில் ஈடுபட்டபோது தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் அம்மாப்பேட்டை தனியார் மருத்துவமனை மற்றும் கேளம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

Related Stories: