சென்னை: சென்னை மாநகர காவல் துறையில் நேற்று வரை கூடுதல் கமிஷனர் உட்பட 303 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறனர். அதில் 2 துணை கமிஷனர்கள் உபட்ட 101 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு நோய் தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், மயிலாப்பூர் உதவி கமிஷனர் உட்பட மாநகர காவல் துறையில் நேற்று 6 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து உதவி கமிஷனர் உட்பட 6 போலீசாரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.