சென்னை: சென்னை ஐஐடி 7வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஸ்டீவன் சத்யராஜ் (53). இவர், சென்னை ஐஐடியில் ஏரோ ஸ்பேஸ் பிரிவில் இளநிலை உதவியாளராக வேலை செய்து வந்தார். உடல் பருமன் காரணமாக இருவருக்கு மூச்சு திணறல் இருந்துள்ளது. கடந்த 25ம் தேதி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், உடனே ஐஐடி வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று பரிசோதனை முடிவு வந்ததில் இறந்த ஸ்டீவன் சத்யராஜிக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியானது. அதைதொடர்ந்து அவரது உடல் தரமணி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.