சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வருகின்ற ஜுன் 12ம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதற்கான பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். மேட்டூர் அணையில் இருந்து இதுவரை ஜூன் 12ம் தேதி 16 முறையும், ஜூன் 12ம் தேதிக்கு முன்பாக 10 முறையும், காலதாமதமாக 60 முறையும் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 17-வது முறையாக மேட்டூர் அணையில் இருந்து குறித்த காலமான ஜூன் 12ம் தேதி இந்த ஆண்டு தண்ணீர் திறக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.