மதுரை: மதுரை அருகே அச்சம்பத்து பகுதியில் ஆழ்குழாய் துளையிடும் தொழிலில் ஈடுபட்டிருந்த சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 2 குழந்தை தொழிலாளர்கள் உட்பட 5 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். மதுரை அச்சம்பத்து பகுதியில் ஆழ் குழாய் துளையிடும் பணி கடந்த 5 நாட்களாக இரவு பகலாக நடந்து வருகிறது. இதில் சத்தீஸ்கர் மாநிலத்தின் பழங்குடி தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஒன்பது மாதங்களாக எந்தவித சம்பளமும் தராமல், நிர்வாகி வேலை வாங்கி வந்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரில் மக்கள் கண்காணிப்பகம் மற்றும் ஐடியாஸ் மனித உரிமை அமைப்பினர் இங்கு நேற்று திடீர் ஆய்வு செய்தனர். இதில் 2 குழந்தை தொழிலாளர்கள் உள்பட 5 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.