சென்னை: கலைஞர் அறக்கட்டளை சார்பில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக 16 பேருக்கு தலா 25 ஆயிரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இது குறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, கலைஞர் தனது சொந்த பொறுப்பில் அளித்த ₹5 கோடியை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக்கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.