சென்னை: ஊரடங்கு தளர்வுக்கு பிறகு, நேற்று 3வது நாளான 42 உள்நாட்டு விமானங்கள் சென்னையில் இருந்து இயக்கப்பட்டது. இதில் 21 விமானங்கள் டெல்லி, அந்தமான், கவுகாத்தி, ராஜ்கோட், ஐதராபாத், பெங்களூர் கோவை, சேலம் ஆகிய நகர்களுக்கு இயக்கப்பட்டன. அதைப்போல் 21 விமானங்கள் மறுமார்க்கமாக சென்னைக்கு இயக்கப்பட்டன.தமிழகத்தில் சேலத்துக்கும், ஆந்திரா மாநிலம் கடப்பாவுக்கும் நேற்று முதல் விமான சேவை தொடங்கியது. நேற்று காலை 6.30 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 109 பயணிகளுடன் டெல்லி புறப்பட்டுச் சென்றது.