சென்னை: சிபிசிஐடி டிஜிபியாக இருந்த, ஜாபர்சேட், சிவில் சப்ளை சிஐடி டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். தமிழக சிபிசிஐடி டிஜிபியாக ஜாபர் சேட் பதவி வகித்து வந்தார். அவரது பதவி காலத்தில் தான் தமிழகத்தையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்குகள் நடைபெற்றது.
இந்த இரண்டு வழக்குகளிலும் காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பலர் நேரடியாக ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது. இந்த இரண்டு வழக்குகளிலும் அரசு அதிகாரிகள் முதல் ஆளுங்கட்சி பிரமுகர்கள் வரை பலர் சிக்கினர்.