சிவில் சப்ளை சிஐடி டிஜிபியாக ஜாபர் சேட் நியமனம்

சென்னை: சிபிசிஐடி டிஜிபியாக இருந்த, ஜாபர்சேட், சிவில் சப்ளை சிஐடி டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். தமிழக சிபிசிஐடி டிஜிபியாக ஜாபர் சேட் பதவி வகித்து வந்தார். அவரது பதவி காலத்தில் தான் தமிழகத்தையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்குகள் நடைபெற்றது.

இந்த இரண்டு வழக்குகளிலும் காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பலர் நேரடியாக ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது. இந்த இரண்டு வழக்குகளிலும் அரசு அதிகாரிகள் முதல் ஆளுங்கட்சி பிரமுகர்கள் வரை பலர் சிக்கினர்.

இந்நிலையில் சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   இதுகுறித்து உள்துறைச் செயலாளர் எஸ்.ேக.பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் சிவில் சப்ளை சிஐடி டிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவில் சப்ளை சிஐடி ஏடிஜிபியாக இருந்த பிரதீப் வி.பிலிப் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளார்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுளள்து.

Related Stories: