பழநி: பழநி பகுதியில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ள நிலையில் படைப்புழு தாக்குதலால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பழநி பகுதியில் 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவை. இங்கு விவசாயம் இப்பகுதியில் உள்ள அணைகள் மற்றும் அணைகளில் இருந்து நீர்ப்பாசனம் பெறும் கண்மாய்களை நம்பியுமே இருந்து வருகிறது. தற்போது ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதாலும், கிணற்று பாசனத்தை நம்பியும் பழநி பகுதியில் ஆங்காங்கே மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில் மக்காச்சோளத்தில் வழக்கம்போல் படைப்புழு தாக்குதல் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.