சென்னை: சென்னையில் பிரபல நடிகர் ஒருவர் மாற்றுத்திறனாளிகளுக்கான அறக்கட்டளை ஒன்றை அசோக்நகரில் நடத்தி வருகிறார். இதில் 30க்கும் மேற்பட்டவர்கள் தங்கி உள்ளனர். இந்நிலையில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் லயோலோ கல்லூரி முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த இல்லத்தில் வசிப்பவர்களுக்கு சமையல் செய்யும் பெண் அருகில் உள்ள தெருவில் வசித்து வருகிறார். இவரின் தெருவில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அந்த தெரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப் பட்டுள்ளது.