பிரபல நடிகரின் அறக்கட்டளை இல்லத்தில் 20 பேருக்கு பாதிப்பு

சென்னை:  சென்னையில் பிரபல நடிகர் ஒருவர் மாற்றுத்திறனாளிகளுக்கான அறக்கட்டளை ஒன்றை அசோக்நகரில் நடத்தி வருகிறார். இதில் 30க்கும் மேற்பட்டவர்கள் தங்கி உள்ளனர். இந்நிலையில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் லயோலோ கல்லூரி முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த இல்லத்தில் வசிப்பவர்களுக்கு சமையல் செய்யும் பெண் அருகில் உள்ள தெருவில் வசித்து வருகிறார்.  இவரின் தெருவில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அந்த தெரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப் பட்டுள்ளது.

சமையல் செய்யும் இந்த பெண் மூலம்தான் இல்லத்தில் இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சிக்கு தகவல் அளிக்கப்பட்டது.

லயோலோ கல்லூரியில் இவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உடல் ரீதியாக பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவமனையிலும் பாதிப்பு இல்லாதவர்கள் மாநகராட்சி தனிமைப்படுத்துதல் முகாம்களிலும் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என மாநகராட்சி ஊழியர் தெரிவித்தார்.

Related Stories: