2000 குடும்பங்களுக்கு நிவாரண உதவி

ஸ்ரீபெரும்புதூர்:  ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மாம்பாக்கம், தண்டலம் ஆகிய பகுதிகளில்  ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய திமுக சார்பில் அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி ஆகியவை வழங்கப்பட்டன. ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய செயலாளர் மேவளூர்குப்பம் கோபால் தலைமை வகித்தார். இளைஞரணி அமைப்பாளர் குண்ணம் ராமமூர்த்தி வரவேற்றார். ஒன்றிய  அவைத்தலைவர் மோகனன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் குண்ணம் முருகன், வளர்புரம் ஜார்ஜ், ஒன்றிய வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ. கலந்து கொண்டு ₹10 லட்சத்தில், 2000க்கும் மேற்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.

Related Stories: