சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு நீடிப்பதால் பொது போக்குவரத்தான பேருந்து, டாக்சி, ஆட்டோ உள்ளிட்டவைகள் இயக்க அனுமதி கொடுக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த 23ம் தேதி முதல் சென்னை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஆட்டோ மற்றும் சைக்கிள் ரிக்ஷாக்களை இயக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.இந்நிலையில், சென்னையில் நேற்று முதல் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் ரயில் போக்குவரத்துக்கும் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது.