சென்னை: ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கொரோனாவால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (87) ஒருவருக்கு சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல், சளி, இருமல் போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து 23ம் தேதி சோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவு நேற்று வந்தது. அதில் அவருக்கு ெகாரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.