மார்த்தாண்டம்: ஆடு, மாடுகளை வதம் செய்யவும், இறைச்சி விற்பனைக்கும் பல விதிமுறைகள் உள்ளன. பொது இடங்களில் ஆடு, மாடுகளை வெட்டக்கூடாது. வதை கூடத்தில் சுகாதாரமான முறையில் வெட்டி கடைகளில் விதிமுறைக்கு உள்பட்டு விற்பனை செய்யலாம். இறந்த ஆடு, மாடுகள், நோய்வாய்ப்பட்டவை போன்றவற்றின் இறைச்சியை விற்பனை செய்யக்கூடாது. ஆனால் குமரி மாவட்டத்தில் பல இறைச்சிக்கடைகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகின்றன. நேற்று இரவிப்புதூர்க்கடை சந்திப்பில் உள்ள ஒரு இறைச்சிக்கடையில் விற்பனை செய்வதற்காக, அருகில் தேசிய நெடுஞ்சாலையோரமாக மாடு ஒன்றை வெட்டி அதன் தோலை உரித்து கொண்டிருந்தனர்.