தர்மபுரி: தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் போதிய கட்டிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், 2 ஷிப்டாக நடக்கும் பாட வகுப்புகள் இனிவரும் காலங்களில் ஒரே ஷிப்டாக மாற்றப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியில் நேற்று அமைச்சர் அன்பழகன் அளித்த பேட்டி: சென்னை பல்கலைக்கழகத்தில் தற்போது உள்ள துணைவேந்தரின் பதவிக்காலம், வரும் 27ம் தேதி நிறைவடைகிறது. புதிய துணைவேந்தரை நியமிக்க தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் உள்ள 3 உறுப்பினர்களும், வரும் 31ம்தேதி வரை துணைவேந்தர் விண்ணப்பங்களை பெறுவார்கள். அதன் மீது ஆய்வு மேற்கொண்டு, பெயர் பட்டியல் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும். அதன்படி ஆளுநர் சென்னை பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தேர்வு செய்து அறிவிப்பார்.