திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட அகழாய்வு கடந்த 20ம் தேதி மீண்டும் தொடங்கப்பட்டது. 6ம் கட்ட அகழாய்வு ரூ.40 லட்சம் செலவில் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் பகுதிகளில் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், இடம் தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டதால் மணலூரில் பணிகள் தொடங்கவில்லை. தற்போது கீழடியில் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டதால், மணலூரில் யோகலட்சுமி என்பவரது இரண்டரை ஏக்கர் நிலத்தில் அகழாய்வு பணிகள் நேற்று காலை முதல் தொடங்கின.