பெரம்பூர்: திருவிக நகர் மண்டலத்தில் நேற்று 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியவருக்கு மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட ஆடுதொட்டி பகுதியில் 3 பேருக்கும், திருவிக நகர் பகுதியில் 3 பேருக்கும், கேஎம் கார்டன் பகுதியில் ஒருவருக்கும், புளியந்தோப்பு பகுதியில் 20 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல், பேசின் பிரிட்ஜ் பகுதியில் 4 பேருக்கும், திருவிக நகர் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் 2 பேருக்கும், பெரவள்ளூர் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் 2 பேருக்கும், ஜிகேஎம் காலனி 28வது தெரு மற்றும் லோகோ ஓர்கஸ் ரோடு ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.