சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடதமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை அதிகபட்சமாக 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நாளை காலை 11 மணிக்கு மேல் மக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.