சென்னை: சென்னையில் பெண் துணை கமிஷனரின் மகனுக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன் களப்பணியாளர்களாக உள்ள பலரையும் கொரோனா தாக்கி வருகிறது. சென்னையில் கூடுதல் கமிஷனர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கும் கொரோனா வைரஸ் தாக்கியிருந்தது. அதேபோல பல டாக்டர்கள், நர்சுகள், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் கொரோனா தாக்கியது. இந்தநிலையில், சென்னை பெண் துணை கமிஷனர் ஒருவரின் மகனுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று கண்டறியப்பட்டுள்ளது.