மாமல்லபுரம்: காஞ்சிபுரம் பஸ் நிலையம் பின்புறம், அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன் தலைவராக உள்ள மத்திய கூட்டுறவு வங்கி உள்ளது. இங்கு பணியாற்றும் சிறுகாவேரிப்பாக்கத்தை சேர்ந்த ஊழியரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் வங்கியில் லோன்மேளா நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதனால் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என அச்சம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் இதனை மூடிமறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.