திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, 636 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் பூந்தமல்லி மாநகராட்சி, திருவேற்காடு நகராட்சி, திருநின்றவூர் பேரூராட்சி, வில்லிவாக்கம், ஈக்காடு, கடம்பத்தூர், சோழவரம், புழல், பூந்தமல்லி ஆகிய ஒன்றியங்களில் மொத்தம் 39 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து 39 பேரும் சிகிச்சைக்காக திருவள்ளூர், பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.