பிஎஸ்என்எல் சேவையில் திடீர் தொழில்நுட்ப கோளாறு காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ள தற்காலிக எண் அறிவிப்பு

சென்னை: காவல் கட்டுப்பாட்டு அறையில் அவசர தேவை மற்றும் புகார் தெரிவிப்பதற்காக 100 மற்றும் 112 ஆகிய எண்கள் செயல்பாட்டில் உள்ளது. இந்தநிலையில், பிஎஸ்என்எல் தொலை தொடர்பில் நேற்று மாலை திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. ஏர்டெல், உள்ளிட்ட தொலைத்தொடர் நிறுவன வாடிக்கையாளர்களும் தொடர்பு கொள்வதில் இடர்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, மாற்று எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  

இதுகுறித்து பிஎஸ்என்எல் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தொழில்நுட்ப கோளாறு காரணமாக குறிப்பிட்ட தொலைத்தொடர்பு நிறுவன வாடிக்கையாளர்கள் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. தற்போது, தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதுவரை பொதுமக்கள் 044-46100100 மற்றும் 044-71200100 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

       

Related Stories: