ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் மது விலக்கு அமல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், காவல் நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டது. பெரியபாளையத்தில் மது விலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையத்தில், ஒரு எஸ்ஐ, தலைமை காவலர் என மொத்தம் 15 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு, கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, இவர்களுக்கு தொற்று இல்லை என தெரியவந்தது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெரியபாளையம் மது விலக்கு அமல் பிரிவு எஸ்ஐக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.