வாலாஜாபாத்: டாஸ்மாக் கடை டோக்கனை பிளாக்கில் விற்ற வாலிபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு மதுபானங்கள் வாங்க சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் வாங்குவோருக்கு வழங்கும் டோக்கன்கள் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் வாலாஜாபாத் அதன் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் சிலர் டாஸ்மாக் கடைகளில் வழங்கும் டோக்கன்கள், விற்பனை செய்வதாக வாலாஜாபாத் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.