பெரும்புதூர்: பெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த பள்ள மொளச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி எஸ்தர் (45). இவரது மனைவி தங்கராணி (36). ஆரனேரி கிராமத்தில் காய்கறி கடை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் காலை அந்தோணி எஸ்தர், மனைவி தங்கராணியுடன் பைக்கில் ஆரனேரிக்கு புறப்பட்டார். மாம்பாக்கம் அருகே சென்றபோது, எதிரே வேகமாக வந்த பைக், அந்தோணி பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் கீழே விழுந்த தங்கராணி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.