பொன்னேரி: பொன்னேரி அருகே விடுமுறை கால ஊதியம் வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து துறைமுக வாயிலில் நிவாரண பொருட்களை வீசி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் அதானி துறைமுகத்தில் அதே கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கு காரணமாக பணியாளர்கள் பலர் வேலைக்கு செல்லவில்லை. பணிக்கு செல்லாதவர்களுக்கு துறைமுக நிர்வாகம் ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.