மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் தொடர்ந்து நேற்று 4வது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அப்போது, கடற்கரையில் நின்றிருந்த ஒரு பசு மாடு ராட்சத அலையில் சிக்கி பரிதாபமாக பலியானது.வங்க கடலில் கடந்த வாரம் உருவான புயலால், தமிழகத்தின் பல இடங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதையொட்டி, மாமல்லபுரத்தில் நேற்று தொடர்ந்து 4வது நாளாக பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் மாமல்லபுரம், கொக்கிலமேடு, வட நெம்மேலி குப்பம், காட்டுக்குப்பம், பட்டிப்புலம் குப்பம், புதிய கல்பாக்கம், தேவனேரி, சூளேரிக்கா, எடையூர் ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.