செங்கல்பட்டு: தமிழகம் முழுவதும் 44 சுங்கச்சாவடிகள் உள்ளன. கொரோனா ஊரடங்கு உத்தரவால் கடந்த 2 மாதங்களுக்கு முன் அனைத்து சுங்கச்சாவடிகளும் மூடப்பட்டன. தற்போது, ஊரடங்கில் சில தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டு, கடந்த மாதம் 20ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க, மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இதற்கிடையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்ததால் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இதனால் பரனூர், ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கவில்லை. வாகனங்கள், கட்டணமின்றி சென்று வந்தன.