சென்னை: ஊரடங்கால் தொழில் செய்ய முடியாமல் கஷ்டப்படும் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு தலா ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு முடி திருத்துவோர் யூனியன் தலைவர் எம்.முனுசாமி தாக்கல் செய்த மனுவில், “தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேர் முடி திருத்தும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். எங்கள் யூனியனில் 25 ஆயிரம்பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள முடி திருத்தும் தொழிலாளர்கள் மாதம் ரூ.15 ஆயிரம்வரை வருமானம் ஈட்டிவந்தனர். திடீரென கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சலூன் கடைகள் முழுவதும் மூடப்பட்டன.