சென்னை: தமிழகத்தில் ஆம்னி பஸ் சேவை, அரசு உத்தரவுக்கு பிறகே துவங்கும் என உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 4,000 ஆம்னி பஸ்கள் இயக்கத்தில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதைக்கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில் பொது போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. இதன்காரணமாக ஆம்னி பஸ் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் கூறியதாவது: 144 தடை உத்தரவுக்கு பிறகு ஆம்னி பேருந்து தொழில் சார்ந்த ஒரு லட்சம் தொழிலாளர்கள் மற்றும் ஆயிரம் பேருந்து உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.