சென்னை: ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் ஆர்டிஓ அலுவலகங்கள் செயல்பட துவங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று முன்தினம் முதல் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட அரசு உத்தரவிட்டது. அதன்படி தற்போது 50 சதவீத பணியாளர்களுடன் ஆர்டிஓ அலுவலகங்கள் செயல்படுகின்றன. எனவே பொதுமக்கள் லைசென்ஸ் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இனி மேற்கொள்ள முடியும்.