சென்னை: மத்திய - மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து மே 22 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தொமுச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார். இதுகுறித்து தொமுச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு தொழிலாளர்களும் தாங்கள் பணி செய்யும் இடங்களில் 5 பேருக்கு மிகாமல் மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு, தனியார் மயமாக்குதலை கண்டித்தும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தொடர்ந்து புறக்கணித்து வரும் மத்திய அரசை எதிர்த்தும் பதாகைகளை ஏந்தி, கருப்புக் கொடியுடன் 22ம் தேதி காலை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.