சென்னை: சென்னையில் ஆவின் பால் பூத் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியை சேர்ந்த 48 வயது நபர் ஒருவர், அங்குள்ள ஆவின் பால் பூத் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக இருமல் மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், மருத்துவ பரிசோதனை செய்துகொண்டார். இதில், நேற்று அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி, மகன், மகள் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.