கொரோனா தொற்றில் இருந்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டியவர்களை பாதுகாக்க 11 வகையான சிறப்பு மருத்துவ குழுக்கள் அமைப்பு

சென்னை: கொரோனா தொற்றில் இருந்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டியவர்களை பாதுகாக்க 11 வகையான சிறப்பு மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், மருத்துவ சங்க நிர்வாகிகள், தன்னார்வ தொண்டு நிறுவன மருத்துவர்கள் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு மருத்துவ குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில் சிறப்பு கவனம் தேவைப்படும் நபர்கள் கண்டறியப்படுவர். சிறப்பு கவனம் தேவைப்படும் நபர்கள் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Related Stories: