டெல்லி : புலம்பெயர் தொழிலாளர்களின் துன்பங்களை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாடு முழுவதும் 4ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிமாநில தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்க கூடுதல் பேருந்துகள் மற்றும் ரயில் சேவைகளை அதிகரிக்க மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நான்காம் கட்ட ஊரடங்கிற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை குறைத்து விட வேண்டாம்; விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என, மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதி இருக்கிறார். அதில்