கடலூர்: உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கடலூரில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே தர்மநல்லூர் என்ற கிராமத்தில் உள்ளாட்சி தேர்தலில் இரு தரப்பினர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. முன்னதாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ராஜேஸ்வரி என்பவரும் அக்சயா என்பவரும் போட்டியிட்டுள்ளனர். இதில் ராஜேஸ்வரி என்பவருக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்ததால் அவர் வெற்றி பெற்றார். இந்நிலையில் நேற்று இரவில் இருந்தே இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.