தாம்பரம்: மேற்கு தாம்பரம், ராஜாஜி சாலையை சேர்ந்தவர் சரவணன் (31), பல் மருத்துவர். மேற்கு தாம்பரம் மற்றும் அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் கிளினிக் நடத்தி வந்தார். இவர், நேற்று முன்தினம் அம்பத்தூரில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலை வழியாக தாம்பரம் புறப்பட்டார்.
மேற்கு தாம்பரம், கன்னடபாளையம் அருகே வந்தபோது, இவரது இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சரவணன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.