கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 19ந் தேதி முதலே சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.
தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குனர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஆர்.கே.செல்வமணி. தற்போது அரசு படப்பிடிப்பு தவிர்த்த மற்ற பணிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளது.