சென்னை : வங்கக்கடலில் உருவான ஆம்பன் புயல் தீவிரமடைந்து சூப்பர் புயலாக வலுப்பெற்றுள்ளது என்றும் இந்த ஆம்பன் புயலால் 5 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உயர் உச்ச புயலாக(extremely severe cyclone) இருந்த ஆம்பன் புயல் தற்போது மிக கடும் புயலாக (super cyclone) மாறியுள்ளது. இது ஒடிஷா, மேற்கு வங்கம் அருகே கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் வடக்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குமரி கடல் மன்னார் வளைகுடா பகுதியில் 55-65 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் அங்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்பன் புயலால் ஒடிசா, மேற்குவங்கம், சிக்கிம், அசாம், மேகலயாவில் மே 21 வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.