சென்னையில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: சென்னை எம்.ஜி.ஆர்.நகர் மார்க்கெட்டில் வியாபாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மார்க்கெட்டில் கடை நடத்தி வந்த 150 வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர். திருமங்கலம் பாடிகுப்பத்தில் 24 வயது நபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  சென்னைக்கு பூந்தமல்லி அடுத்த காட்டுப்பக்கத்தில் வசித்து வரும் ஸ்கேன் சென்டர் ஊழியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Related Stories: