தாம்பரம்: ஊரடங்கு தளர்வுக்கு பிறகு சில கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு திறக்கப்படும் கடைகளில் போலீசார் சார்பில் விழிப்புணர்வு பேனர்கள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனி கடைகளுக்கு போலீசார் சார்பில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பேனர்கள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் பேனர்களுக்கு 150 முதல் 250 வரை கட்டாயப்படுத்தி வசூலிப்பதாக வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து அனைத்து கடைகளிலும் விழிப்புணர்வு பேனர்கள் சேலையூர் போலீசார் சார்பில் வழங்கப்படுகிறது. அந்த பேனரில் வைரஸ் நோயிலிருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு காத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து வாசகங்கள் அடங்கியுள்ளது.