பொன்னேரி: பழவேற்காடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் அஜீத். இவருக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட ஆடுகள் நேற்று முன்தினம் மாலை பழவேற்காடு ஆண்டார்மடம் அருகே மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்தன. அப்போது அவ்வழியே காரில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்த 5க்கும் மேற்பட்ட ஆடுகளை தங்களது காருக்குள் ஏற்ற முயற்சித்தனர். அப்போது அவ்வழியே பைக்கில் வந்தவர் இதனை கண்டு சத்தம் போடவே, கையில் அகப்பட்ட 2 ஆடுகளை கார் டிக்கியில் போட்டுக் கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி செல்ல முயற்சித்தது.